
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எலைட் குருப் அணிகளுக்கு இடையேயான ஐந்தாம் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அலூரில் நடைபெறும் ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹரியாணா அணிகள் மோதின. இந்த வருட விஜய் ஹசாரே போட்டியில் பிகாருக்கு எதிரான தமிழக அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் ஆந்திராவை எளிதாக வீழ்த்தியது தமிழக அணி. 3ஆவது ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 4ஆவது ஆட்டத்தில் கோவா அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹரியாணா அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணிக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்து வரும் சாய் சுதர்சன் - ஜெகதீசன் ஜோடி இன்றும் அபாரமாக விளையாடினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தார்கள். பின் சாய் சுதர்சன் 67 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.