
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான அணியை வரும் 28ஆம் தேதி அறிவிக்க வேண்டும். இந்த தொடரில் 8 அணிகளும் தங்களுடைய வீரர்களை அறிவித்த நிலையில் வங்கதேசமும் இலங்கையும் இன்னும் தங்களது அணி விவரத்தை அறிவிக்கவில்லை.
இந்நிலையில் வங்கதேச அணியில் கடும் மோதல் ஏற்பட்டு இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எல்கேஜி சிறுவன் போல் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இந்த வீரரை நீங்கள் தேர்வு செய்தால் நான் உலக கோப்பைக்கு வரமாட்டேன் என்று போர் கொடி தூக்கி உள்ளார்.எனினும் அவருடைய இந்த பேச்சுக்கு நியாயமான காரணமும் ஒன்று இருக்கிறது.
அதாவது வங்கதேச அணியில் கேப்டனாக இருந்த தமீம் இக்பால் அண்மையில் வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஓய்வு பெற்றார். இதனையடுத்து வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா பஞ்சாயத்து செய்து மீண்டும் தமீம் இக்பாலை அணிக்குள் வர வைத்தார். இந்த நிலையில் தமீம் கேப்டனாக தொடர விரும்பவில்லை என தெரிவித்தவுடன் தற்போது மீண்டும் ஷாகிப் அல் ஹசன் அந்த பொறுப்புக்கு வந்தார்.