
Team India Going In The Right Way, Feels Captain Rishabh Pant (Image Source: Google)
இந்தியா வந்த தென் ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் முழு ஆதிக்கம் செலுத்தி வெற்றிபெற்ற தென் ஆப்பிரிக்க அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்தது.
இதனால், தொடர் 2-2 என சமநிலை அடைந்ததால், பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறவிருந்த கடைசிப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், மழை குறுக்கீடு காரணமாக கடைசிப் போட்டி நடைபெறவில்லை.
ரிசர்வ் டேவும் இல்லாததால், இத்தொடர் 2-2 என சமன் அடைந்துவிட்டதாக நடுவர்கள் அறிவித்தார்கள். கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.