Advertisement

இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா - அச்சத்தில் சக வீரர்கள்!

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் உதவியாளர் தயானந்தா கரானிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 15, 2021 • 17:49 PM
COVID-19: Team India support staff Dayananda tests positive, Saha to isolate as close contact
COVID-19: Team India support staff Dayananda tests positive, Saha to isolate as close contact (Image Source: Google)
Advertisement

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

அதற்கு முன்னதாக கவுண்டி லெவன் அணியுடன் வரும் ஜூலை 20ஆம் தேதி இந்திய அணி மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடவுள்ளது. 

Trending


இந்நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையின் முடிவில் அதிரடி வீரர் ரிஷப் பந்த்திற்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது ஹோட்டல் அறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

இதற்கிடையில், இந்திய அணியின் உதவியாளர் தயானந்தா கரானிக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது வீரர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவருடன் நெருங்கி பழகிய விருத்திமான் சஹாவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

இதில் சஹாவிற்கு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு பரிசோதனையில் அவருக்கு தோற்று இல்லை என உறுதியாகியுள்ளது. இருப்பினும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement