
Teams Can Field Nine Players During World Cup In Case Of Covid: ICC (Image Source: Google)
நியூசிலாந்தில் மார்ச் 4 முதல் மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. 31 நாள்களுக்கு ஆறு நகரங்களில் 31 ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் என 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.
இந்த 8 அணிகளும் இதர அணிகளுடன் ஒரு முறை மோதும் விதத்தில் லீக் ஆட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஏப்ரல் 3 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கரோனா சூழல் காரணமாகப் புதிய விதிமுறை ஒன்றை வெளியிட்டுள்ளது ஐசிசி. அணியில் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டால் ஆட்டத்தைத் தொடர்வதற்காக இந்த நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது.