Advertisement

இந்த போட்டியில் எங்களது செயல்பாடு திருப்தியாக இருந்தது - டெம்பா பவுமா!

இந்த போட்டியில் டி காக் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான் எனது பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றத்தை காண வேண்டியது அவசியம் என தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 13, 2023 • 12:01 PM
இந்த போட்டியில் எங்களது செயல்பாடு திருப்தியாக இருந்தது - டெம்பா பவுமா!
இந்த போட்டியில் எங்களது செயல்பாடு திருப்தியாக இருந்தது - டெம்பா பவுமா! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அக்டோபர் 12ஆம் தேதி லக்னோ நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 10ஆவது லீக் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா அணியானது ஆஸ்திரேலியா அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் குவித்தது. பின்னர் 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது தென் ஆப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.

Trending


இறுதியில் ஆஸ்திரேலிய அணியானது 40.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 134 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, “இந்த போட்டியில் 311 ரன்கள் என்பது வெற்றிக்கு போதுமான இலக்கையும் தாண்டிய ரன்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் 290 முதல் 300 ரன்கள் வரை அடித்திருந்தாலே இந்த போட்டியின் வெற்றிக்கு போதுமான ஒன்றாக இருந்திருக்கும்.

ஆனால் நாங்கள் அதையும் விட சற்று கூடுதலாக ரன் குவித்திருந்தோம். நல்லவேளை இந்த போட்டியில் டாஸில் தோற்றது நல்ல விசயமாக மாறிவிட்டது. ஏனெனில் நாங்களும் டாஸில் வெற்றி பெற்றிருந்தால் சேஸிங் செய்ய தான் நினைத்திருப்போம். இந்த போட்டியில் டி காக் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான் எனது பேட்டிங்கில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றத்தை காண வேண்டியது அவசியம்.

மொத்தமாக இந்த போட்டியில் எங்களது செயல்பாடு திருப்தியாக இருந்தது. அதேபோன்று பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலியா அணியை கட்டுப்படுத்தினர். குறிப்பாக லுங்கி இங்கிடி, ரபாடா ஆகியோர் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் கிடைத்த நம்பிக்கையையும், பாடத்தையும் அடுத்த போட்டியிலும் கொண்டு சென்று அங்கும் வெற்றி பெறுவோம்” என தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement