
ஐபிஎல் தொடரில் நேற்றைய 10ஆவது ஐபிஎல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் டெல்லி கேபிடல்ஸ் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸில், ஓபனர்களாக மேத்யூ வேடும், ஷுப்மன் கில்லும் களம் இறங்கினர். துவக்கத்திலேயே மேத்யூ வேட் ஆட்டமிழக்க, பின் வந்த விஜய் சங்கரும்பெரிதாக ஜொலிக்கவில்லை. பின் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா (31), டேவிட் மில்லர் (20) என வெளியேறினர். ஷுப்மன் கில் மட்டும் அதிரடியாக 46 பந்துகளில் 4 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகள் என 84 ரன்களை எடுத்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.
அதன்பின் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸில், கேப்டன் ரிஷப் பந்த் மட்டும் அதிகபட்சமாக 43 ரன்களை எடுத்தார். இவரை தவிர, அதிகபட்சமாக லலித் யாதவ் (25), ரோவ்மேன் பவல் (20) ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் டெல்லி அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 157 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.