Advertisement
Advertisement
Advertisement

எங்களை விட அவர்கள் சிறந்த அணி என்பதனை இந்த தொடரில் காண்பித்து விட்டனர் - நிக்கோலஸ் பூரன்!

இந்திய அணி வென்றதற்கு எனது வாழ்த்துக்கள் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 08, 2022 • 14:43 PM
The Batters didn't do the job and we paid the price - Nicholas Pooran
The Batters didn't do the job and we paid the price - Nicholas Pooran (Image Source: Google)
Advertisement

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது ஏற்கனவே அங்கு நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றிய வேளையில் நேற்றுடன் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணத்தில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 அவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்தது.

பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 100 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் காரணமாக 88 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது. நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 தொடரில் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடரின் 4 போட்டிகளில் அவர்கள் தோல்வியை சந்தித்தது அந்த அணியின் பலவீனத்தை பெரிதாக வெளிகாட்டியுள்ளது.

Trending


அதேவேளையில் டி20 உலக கோப்பை தொடர் நெருங்கி வரும் வேளையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இப்படி சொதப்பி வருவது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான்,

“நாங்கள் இந்த போட்டியில் நன்றாக விளையாடவில்லை அதை ஒப்புக்கொள்கிறேன். மேலும் நாங்கள் தொடர்ந்து செய்து வரும் தவறுகளில் இருந்து இன்னும் சரியான பாடத்தை கற்றுக் கொள்ளவில்லை. பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி நாங்கள் இன்னும் முன்னேற்றத்தை செய்ய வேண்டியது அவசியம். இந்த போட்டியின் போது எங்களால் எந்த இடத்திலும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவே முடியவில்லை. அந்த அளவிற்கு இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது.

பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி நாங்கள் நல்ல ஒரு திறனை வெளிக்காட்ட வேண்டும். அதேபோன்று இந்திய அணி போன்ற ஒரு கடினமான அணிக்கு எதிராக நாங்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். இந்திய அணி விளையாடிய சிறப்பான ஆட்டத்தினால் எங்களால் எந்த இடத்திலுமே அவர்களை பிடிக்க முடியவில்லை. உலககோப்பை இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள வேளையில் எங்கள் அணியை நாங்கள் வலுவாக கட்டமைக்க வேண்டியது அவசியம்.

இந்த தொடரை இந்திய அணி வென்றதற்கு எனது வாழ்த்துக்கள். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அவர்கள் சிறந்து விளங்கியயதால் இந்த தொடரில் எங்களை வீழ்த்தினர். மேலும் எங்களை விட அவர்கள் சிறந்த அணி என்பதனை இந்த தொடரில் காண்பித்து விட்டனர்” என தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement