
இங்கிலாந்தின் நடைபெற்று வந்த தி ஹண்ட்ரட் மகளிர் கிரிக்கெட் தொடரானது இன்றுடன் நிறைவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வேல்ஷ் ஃபையர் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வேல்ஷ் ஃபையர் அணியில் சோஃபி டங்க்லி 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த கேப்டன் டாமி பியூமண்ட் மற்றும் ஹீலி மேத்யூஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். பின் டாமி பியூமண்ட் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சாரா பிரைஸும் ரன்கல் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஜெஸ் ஜோனசன் ஒருபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் விளையாடிய ஹீலி மேத்யூஸ் 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதேசமயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெஸ் ஜோனசன் அரைசதம் கடந்த கையோடு 54 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் வேல்ஷ் ஃபையர் இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்களைச் சேர்த்தது. லண்டன் அணி தரப்பில் எவா கிரே மற்றும் சாரா கிளென் ஆகியோர் அதலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலங்கை நோக்கி களமிறங்கிய லண்டன் ஸ்பிரிட் அணியில் அதிரடிய வீராங்கனை மெக் லெனிங் 4 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கோர்டெலியா கிரிஃபித் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதன்பின் இணைந்த ஜார்ஜியா ரெட்மெய்ன் - கேப்டன் ஹீதர் நைட் இணை ஓரளவு தாக்குப்பிடித்து விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். பின் ஹீதர் நைட் 24 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த டேனியல் கிப்சன் 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜியா ரெட்மெய்னும் 34 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.