
இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் முகாமிட்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது. இதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு 26 பந்துகளில் 11 பவுண்டரிகள் உடன் 121 ரன்கள் விராட் கோலி எடுத்துக் கொடுக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் சேர்த்தது.
இந்திய அளவில் நான்காவது வீரராக 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி, சிறப்பு வாய்ந்த இந்தப் போட்டியில் சதம் அடித்து 500ஆவது சர்வதேச போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். விராட் கோலிக்கு இந்த சதம் அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இருபத்தி ஒன்பதாவது சதமாகவும், ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 76 ஆவது சதமாகவும் பதிவாகி இருக்கிறது.
மேலும் வெளிநாட்டு மண்ணில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்து, அது குறித்தான சர்ச்சைக்குப் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இந்நிலையில் விராட் கோலி பேட்டிங் செய்யும்பொழுது வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் ஜோசுவா டா சில்வா அவருடன் தொடர்ந்து நல்ல முறையில் உரையாடிக் கொண்டே இருந்தார்.