
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் மிகவும் அதிகரித்துள்ளது, இதன் காரணமாக வீரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பாதியில் நிறுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
மேலும் மே 08ஆம் தேதி தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 10.1 ஓவர்களள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் எதிரொளியாகவே இப்போட்டியானது பாதியில் கைவிடப்பட்டது என்ற தகவலும் வெளிவந்துள்ள்து.
இதனையடுத்து 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை பிசிசிஐ ஒரு வார காலம் ஒத்திவைப்பதாக நேற்றைய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், ரசிகர்களின் மனதில் இப்போது கேள்வி என்னவென்றால், பாதியில் கைவிடப்பட்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது நடைபெறுமா என்பது தான்.