ஐபிஎல் 2022: சிஎஸ்கே வின் முதல் வீரராக தோனி தக்கவைப்பு!
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக தோனி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் 14ஆவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் 15ஆவது ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் பங்கேற்கின்றன. இதனால் மிகப்பெரிய அளவில் வீரர்கள் ஏலம் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் தொடருக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் வீரராக கேப்டன் தோனி தக்க வைக்கப்பட்டுள்ளார். இதை சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்று தெரிவித்தது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஒவ்வொரு அணியும் 3 வீரர்கள் வரை தக்க வைத்துக்கொள்ளலாம். அதன்படி சிஎஸ்கேவில் தோனி தக்கவைக்கப்பட்டதன் மூலம் அடுத்த ஆண்டும் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் பெரு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now