
The three-day practice-game ends in a draw (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கவுண்டி லெவன் அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.
ஜூலை 20ஆம் தேதி டர்ஹாமில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. மேலும் இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் முதல் இன்னிங்ஸில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 101 ரன்களையும், ஜடேஜா 75 ரன்களையும் சேர்த்தனர்.