
'There Are Almost 4,000 Tigers In The Wild, But There's Only One Rahul Dravid': Ross Taylor (Image Source: Google)
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஸ் டைலர் தற்போது வெளியிட்டுள்ள சுய சரிதையான பிளாக் அண்ட் ஒயிட் புத்தகம் தான் தறபோது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புத்தகத்தில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் நிற வெறியை தாம் சந்தித்தாகவும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி நிர்வாகி தம்மை அறைந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது ராஸ் டைலர், ஜாம்பவான்களான ராகுல் டிராவிட், வார்னேவுடன் அறைகளை பகிர்ந்த கொண்ட போது இந்த சம்பவம் நடந்தது. நாங்கள் ஓய்வு நேரத்தில் ரந்தாம்புர் தேசிய வனவிலங்க புபூங்காவுக்கு சென்றோம். அப்போது டிராவிட்டிடம் இங்கே எதாவது புலிகளை பார்த்து இருக்குறீர்களா என்று கேட்டேன்.