
‘There is an unwritten rule in this Indian team’: Laxman on Iyer's place in 2nd Test Playing XI vs N (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 345 ரன்களை குவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மூன்றாம் நாளில் நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
இந்தப் போட்டியில் அறிமுக வாய்ப்பைப் பெற்ற இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார்.
மேலும் இந்திய அணிக்காக அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த 16ஆவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். இந்நிலையில் அடுத்த போட்டியில் கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்புவதால் ஸ்ரேயாஸ் ஐயர்அடுத்த போட்டியில் விளையாடுவாரா ? என்பதே அனைவரது கேள்வியாகவும் உள்ளது.