-mdl.jpg)
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் நாளையுடன் நிறைவடைந்து, பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்க உள்ளன. இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 223 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 87 ரன்களையும் ருதுராஜ் 79 ரன்களையும் துபே 22 ரன்களையும் எடுத்தனர். இதைத்தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக வார்னர் 86 ரன்களை எடுத்தார். சென்னை அணியில் தீபக் சாஹர் 3 விக்கெட்களையும் தீக்ஷனா, பதிரானா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 12ஆவது முறையாக ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. அதேசமயம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 14 போட்டிகளில் 5 வெற்றியை மட்டுமே பெற்று தொடரிலிருந்து வெளியேறியது.