
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் எதிர்பார்க்காத வகையில் சிறப்பாக செயல்பட்ட பெரிய அணியில் ஒன்றாக தென் ஆப்பிரிக்க அணி இருந்தது. உலகக் கோப்பைக்கு முன்பாக தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு முன்னேறும் என்று யாரும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக தென் ஆப்பிரிக்க தரப்பிலிருந்து அப்படியான எதிர்பார்ப்புகள் பெரிய அளவில் இல்லை என்பதுதான் உண்மை.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா இந்த உலகக் கோப்பை தொடரை அதிரடியான வெற்றிகள் உடன் ஆரம்பித்தது. அவர்கள் சில உலகச் சாதனைகளை இந்த உலகக் கோப்பையில் படைத்தார்கள். அவர்கள் சென்று கொண்டிருக்கும் விதத்தில் வழக்கமாக அரையிறுதியில் தோற்பதை மாற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள் இல்லை உலக கோப்பையை கைப்பற்றுவார்கள் என்கின்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக உருவானது.
ஆனால் நேற்று மீண்டும் அறையறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோற்று வெளியேறியிருக்கிறார்கள். உலகக் கோப்பையில் 31 வருடங்களாக அவர்களுக்கு தொடர்கின்ற சோகம் நேற்று தொடர்ந்து வந்தது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் கூறும்பொழுது “இந்தப் போட்டியில் யாராவது ஒருவர்தான் வெற்றி பெற முடியும்.