
உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இன்று சென்னையில் தொடங்குகிறது. தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை, ஆர்சிபி அணி எதிர்கொள்கிறது .
முதல் ஆட்டமே ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கவுள்ளதால் நிச்சயம் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இந்தமுறையும் பட்டம் வெல்ல எந்தவிதத்திலும் குறைந்ததாக இல்லை. அதேநேரம் மும்பை அணிக்கு சவால் விடும் வகையில் டெல்லி கேபிடல்ஸ், சிஎஸ்கே, கேகேஆர், பஞ்சாப் கிங்ஸ் அணிகளும் இருக்கிறார்கள் என்பதை மறுக்கவும் இயலாது.
இந்நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திர அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், மும்பை இந்தியன்ஸ் அணியை என்ன வெல்லவே முடியாதா? நாங்களும் அதிரடியான மற்றும் அனுபவ வீரர்களை வைத்துள்ளோம். நாங்களும் கோப்பையை வெல்லத் தகுதியானவர்களே என்று தெரிவித்துள்ளார்.