
பாகிஸ்தானுக்கு எதிரான முதுல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் மண்ணில் 22 ஆணடுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் வென்றுள்ளது. கிரிக்கெட் வரலாற்றில், பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து பெறும் 3ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இதுவரை நடைபெற்ற டெஸ்ட் கிரக்கெட்டிலேயே இது போன்று பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை வேறு எங்கேயும் பார்த்திருக்க முடியாது. அந்த அளவு சிமெண்ட் தரை பிட்சில் இங்கிலாந்து அணி தனது அபார பந்துவீச்சால் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த வெற்றிக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்ய எடுத்த முடிவும்,
வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதமும் முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் தோல்விக்கு அஞ்சாமல் இங்கிலாந்து அணி செயல்படுவதற்கும் பென் ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக அமைந்தார்.