
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மிகவும் சுவாரசியமான தொடராக மாற்றி இருக்கின்றன. அதிரடியான பேட்டி அணுகுமுறை கொண்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, பேட்டிங் செய்ய சாதகமான சிறிய மைதானமான டெல்லியில் வைத்து ஆஃப்கானிஸ்தான் அணி வென்றதிலிருந்து, உலகக் கோப்பைத் தொடர் சூடுப்பிடிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக அனைத்து அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்புகள் திறக்கப்பட்டது.
இதற்கு அடுத்த நாளே நெதர்லாந்து இந்த தொடரில் பலம் வாய்ந்த அணியாக விளங்கும் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்த, புள்ளி பட்டியலில் பல மாற்றங்கள் உருவாகின. இது இன்னும் உலகக்கோப்பை தொடரை சுவாரஸ்யமாக்கியது. இந்த நிலையில் நேற்று ஆஃப்கானிஸ்தான் அணி மீண்டும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்றி இருக்கிறது. தற்பொழுது ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து இந்த இரண்டு அணிகள்தான் உலகக் கோப்பை தொடருக்கு எதிர்பார்ப்பை ஏற்றிய அணிகளாக மாறியிருக்கின்றன.
தற்பொழுது நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் கடைசி பத்தாவது இடத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்திய அணி அடுத்த போட்டியில் லக்னோ மைதானத்தில் இங்கிலாந்து அணி எதிர்த்து விளையாடவுள்ளது. அதிலும் 20 வருடங்கள் கழித்து முதல் முறையாக நியூசிலாந்தை தோற்கடித்து கோப்பையை வெல்லும் பயணத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது.