Advertisement
Advertisement
Advertisement

உலகக்கோப்பை 2023: இந்திய அணியில் திலக் வர்மா சேர்க்க கோரிக்கை விடுக்கும் அஸ்வின், எம்எஸ்கே பிரசாத்!

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் திலக் வர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

Advertisement
உலகக்கோப்பை 2023: இந்திய அணியில் திலக் வர்மா சேர்க்க கோரிக்கை விடுக்கும் அஸ்வின், எம்எஸ்கே பிரசாத்!
உலகக்கோப்பை 2023: இந்திய அணியில் திலக் வர்மா சேர்க்க கோரிக்கை விடுக்கும் அஸ்வின், எம்எஸ்கே பிரசாத்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 10, 2023 • 02:44 PM

நியூசிலாந்து, ஆஸ்திரேலிய உள்ளிட்ட அணிகள் உலகக்கோப்பைக்கான உத்தேச அணியையே தேர்வு செய்துவிட்ட நிலையில், இந்திய அணியோ புதிய வீரர்களுக்கு வாய்ப்பு சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு முன் யாரும் எதிர்பார்க்காத வகையில் சைமண்ட்ஸ் அணியில் இருக்க வேண்டும் என்று விடாபிடியாக கேப்டன் ரிக்கி பாண்டிங் இருந்தார். அந்த உலகக்கோப்பையை ஆஸ்திரேலிய அணி வெல்வதற்கு சைமண்ட்ஸ் மிகமுக்கிய காரணம். 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 10, 2023 • 02:44 PM

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சைமண்ட்ஸ் அடித்த சதம், கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகும். இப்படி உலகக்கோப்பைத் தொடருக்கென பல்வேறு அணிகளும் சர்ப்ரைஸ் வீரர்களை அணிக்குள் கொண்டு வரும். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் தொடரின் போது இங்கிலாந்து அணி ஆர்ச்சரையும், இந்திய அணி விஜய் சங்கர் மற்றும் ரிஷப் பந்த் இருவரையும் அணிக்குள் கொண்டு வந்தது. 

Trending

அது சில நேரங்களில் பலனளிக்கும், பல நேரங்களில் இந்திய அணி காலை வாரிவிடும். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வரும் திலக் வர்மாவை உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின், “இந்திய அணியின் டாப் ஆர்டரில் உள்ள 7 பேட்ஸ்மேன்களில் ஜடேஜா மட்டுமே இடதுகை பேட்ஸ்மேன். இதனால் டாப் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேனுக்கான தேவை உள்ளது. அந்த இடத்தில் திலக் வர்மாவை கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் திலக் வர்மாவால் எளிதாக புல் ஷாட் அடிக்க முடிகிறது. அதேபோல் மொயின் அலி, சான்ட்னர், அகர் என்று ஆஃப் ஸ்பின்னர்கள் இருப்பதால் இடதுகை பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்கு அவசியமாக இருக்கிறார்கள்” என்று காரணம் கூறியுள்ளார்.

அதேபோல் முன்னாள் வீரர் எம்எஸ்கே பிரசாத், “25 முதல்தர போட்டிகளில் மட்டும் 5 சதங்கள், 5 அரைசதங்கள் விளாசி இருக்கிறார் திலக் வர்மா. அவரால் எளிதாக பெரிய ஸ்கோரை விளாச முடிகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத பட்சத்தில் அந்த இடத்தில் திலக் வர்மாவை தேர்வு செய்ய வேண்டும். அதேபோல், ஐபிஎல் தொடரின் போதே திலக் வர்மாவை பார்த்து வியந்துவிட்டேன். இளம் வீரர்களில் திலக் வர்மா லெவலில் கான்ஃபிடன்ஸ் உடன் விளையாடும் வீரர்களை பார்ப்பதே அபூர்வம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement