
தென் ஆப்பிரிகாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நேற்று செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டின் செய்த இந்திய அணி திலக் வர்மாவின் சதத்தின் மூலமாகவும், அபிஷேக் சர்மாவின் அரைசதத்தின் மூலமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 56 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 107 ரன்கள் எடுத்தார். அபிஷேக் சர்மா 25 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் 50 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனையடுத்து 220 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் மார்க்கோ ஜான்சன் 17 பந்துகளில் 54 ரன்களையும், ஹென்ரிச் கிளாஸன் 22 பந்துகளில் 41 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.