இந்திய அணி தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அதிர்ச்சி தோல்வி அடைந்த இந்திய அணி மூன்றாவது போட்டியில் சுதாரித்து வெற்றி பெற்று தொடரில் நீடிக்கிறது. இந்திய அணியின் நடப்பு டி20 தொடரில் துவக்க ஆட்டக்காரர்களாக இடம்பெற்ற, பெறுகின்ற இஷான் கிஷான் மற்றும் எதிர்பார்த்த அளவிற்கு அவர்களது வழக்கமான தரத்தில் இல்லை.
இதன் காரணமாக மூன்றாவது போட்டியில் இசான் கிஷான் நீக்கப்பட்டு ஜெய்ஸ்வாலுக்கு முதல்முறையாக இந்திய டி20 அணியில் வாய்ப்பு தரப்பட்டது. மேலும் இந்தத் தொடரில் முதல் போட்டியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் 20 வயதான ஹைதராபாத்தைச் சேர்ந்த திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்திய அணி தோற்ற இரு ஆட்டங்களிலும் இவரது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த இரண்டு போட்டிகளிலும் 39 மற்றும் 51 ரன்கள் எடுத்தார். தன்னுடைய சர்வதேச முதல் அரைசதத்தை தன் பெயரில் பதிவு செய்தார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்று அணியில் வெற்றியை உறுதி செய்து 49 ரன்கள் எடுத்தார்.