Advertisement

சாம்சன் தனது வாய்ப்புகளை வீணடித்து வருகிறார் - பார்த்தீவ் படேல்!

சாம்சனுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. உண்மையை சொல்வது என்றால், அவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்திக் கொள்வதே கிடையாது என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 07, 2023 • 14:39 PM
சாம்சன் தனது வாய்ப்புகளை வீணடித்து வருகிறார் - பார்த்தீவ் படேல்!
சாம்சன் தனது வாய்ப்புகளை வீணடித்து வருகிறார் - பார்த்தீவ் படேல்! (Image Source: Google)
Advertisement

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பெஸ்ட் இன்டிஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் நேற்று விளையாடியது. முதல் போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோற்று இருந்த நிலையில் நேற்று விளையாடிய இரண்டாவது போட்டியில் மிகவும் மோசமாக விளையாடி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, தற்பொழுது தொடரில் மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்து இருக்கிறது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில், இந்தத் தொடரில் முதல்முறையாக வாய்ப்பு பெற்று இருக்கும் இளம் வீரர் திலக் வர்மா பேட்டிங் மட்டுமே குறிப்பிடும்படியாக இருந்து வருகிறது. மற்ற இந்திய பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கில் எந்த வித புத்திசாலித்தனமும் வெளிப்படவில்லை. 

Trending


நேற்று இரண்டாவது போட்டியிலும் வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் கிடைத்த வாய்ப்பை மோசமாக வீணடித்தார். வெஸ்ட் இண்டீஸ் இடது கை சுழற் பந்துவீச்சாளர் பந்தை கிரீசில் இருந்து இறங்கி வந்து தேவையில்லாமல் அடிக்க முயற்சி செய்து ஆட்டம் இழந்தார். அவரது ஆட்டத்தில் தைரியம் மட்டும் தான் இருக்கிறதே தவிர புத்திசாலித்தனம் கொஞ்சம் கூட தென்படவில்லை. இதற்கான வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்தீவ் படேல் “ஒவ்வொரு முறை இந்தியா தோற்கும் போதும் நாம் எதிர்மறையான அம்சங்களை பார்க்கிறோம். வெள்ளைப் பந்து தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் நின்று விளையாட வேண்டும் என்பதுதான் முக்கியமான விஷயமாக பேசப்பட்டது. அப்படி இதுவரை யாரும் செய்யவில்லை.

ஒவ்வொரு முறையும் அணியில் சஞ்சு சாம்சன் இல்லாத பொழுது, அவர் ஏன் அணியில் இல்லை? அவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று நாம் பேசுகிறோம். ஆனால் அவர் இதுவரை பெற்ற வாய்ப்புகளை பயன்படுத்தவே இல்லை. அவருடைய நேரம் மிக விரைவாக கழிந்து கொண்டு இருக்கிறது. அப்படித்தான் தெரிகிறது.

சாம்சனுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. உண்மையை சொல்வது என்றால், அவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அதிகம் பயன்படுத்திக் கொள்வதே கிடையாது. இந்திய பேட்டிங் யூனிட்டில் சிறப்பாக தெரிந்த ஒரே விஷயம் திலக் வர்மா மட்டுமே. திலக் ரொட்டேட் செய்த விதம், சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் செய்த விதம், கவர்களுக்கு மேல் சிக்சர் அடித்த விதம், இதன் மூலம் அவர் தன்னிடம் என்ன மாதிரியான ஷாட் ரேஞ்ச் இருக்கிறது என்று நமக்கு காட்டினார்.

வெஸ்ட் இண்டீஸ் அவர்களது பந்துவீச்சில் மிக ஒழுக்கமாக இருந்தது. சரியான லென்த்தில் தொடர்ந்து வீசினார்கள். மேலும் அவர்களது ஃபீல்டிங்கும் மிக ஒழுக்கமாக இருந்தது. நாம் இது குறித்து அதிகம் பேசுவதே கிடையாது. சூர்யகுமார் யாதவ் போன்ற ஒரு ஆபத்தான பேட்ஸ்மேன், மிகச் சிறப்பான ஃபீல்டிங் மூலம் ரன் அவுட் செய்யப்படுவது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பை எடுத்துக்கொண்டால் அவர்கள் ஒரு போட்டியின் எல்லாவிதமான பக்கத்திலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement