Advertisement

டிஎன்பிஎல் 2021: நூழிலையில் சதத்தை தவறவிட்ட ஜெகதீசன்; நெல்லைக்கு 166 ரன்கள் இலக்கு!

டிஎன்பிஎல் தொடரில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணையித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 24, 2021 • 17:26 PM
TNPL 2021: CSG have finished with 165
TNPL 2021: CSG have finished with 165 (Image Source: Google)
Advertisement

டிஎன்பிஎல் தொடரின் 6ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளுக்கும் வகையில் கௌசிக் காந்தி ஒரு ரன்னிலும், சுஜய் ரன் ஏதுமின்றியும், ராஜகோபால் சதீஷ், சோனு யாதவ் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

Trending


இருப்பினும் மறுமுனையில் தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ஜெகதீசன் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை மெல்லமெல்ல உயர்த்தினார். பின் சதமடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெகதீசன் 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் அதிசயராஜ், மோகன் அபினவ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement