
கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து, உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் தமிழ்நாடு பிரீமியர் லீக் பக்கம் திரும்பியுள்ளது.
தமிழ்நாட்டின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட், 4 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டிற்கான சீசன் ஜூன் 10 முதல் ஜூலை 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் அதன்பின் உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் என அடுத்தடுத்து தொடர்கள் நடைபெற்றதால் இத்தொடர் இதுநாள் வரை நடத்தப்படவில்லை.
இதையடுத்து இந்தாண்டு தொடருக்கான அட்டவணை கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தியது. அதன்படி வரும் ஜூன் 4ஆம் தேதி முதல் டிஎன்பிஎல் தொடரை தொடங்கி ஜூலை 4ஆம் தேதி வரை போட்டிகள் நடத்தப்படும் என கூறப்பட்டது.