டிஎன்பிஎல் 2021: ஷாரூக் கான் அதிரடி; நெல்லைக்கு 170 ரன் டார்கெட்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 27ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கோவை அணிக்கு கங்கா ஸ்ரீதர் ராஜூ - சுரேஷ் குமார் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கியது. பின் 20 ரன்களில் ராஜூ ஆட்டமிழக்க, 36 ரன்களில் சுரேஷும் விக்கெட்டை இழந்தார்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்சன், அதீக் உர் ரஹ்மான், முகிலேஷ் ஆகியோரும் வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாருக் கான் 5 பவுண்டரி, 5 சிக்சர்களை விளாசி அரைசதம் கடந்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாருக் கான் 64 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now