
TNPL 2021 : Tiruppur Thamizans win a thriller (Image Source: Google)
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 16ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியும், ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தினேஷ் 39 ரன்களையும், ஃபிரான்சிஸ் 38 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து களமிறங்கிய கோவை கிங்ஸ் அணியில் சுரேஷ் குமார் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கங்கா ஸ்ரீதர் ராஜு - அஸ்வின் வென்கடரமனன் இணை சிறப்பாக விளையாடி நல்ல ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுதது.