
TNPL 2022: Lyca Kovai Kings defeat Nellai Royal Kings by 5 runs (Image Source: Google)
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸும் லைகா கோவை கிங்ஸும் ஆடிவருகின்றன.
சேலத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய லைகா அணியின் தொடக்க வீரர்கள் சுரேஷ் குமார் - ஸ்ரீதர் ராஜு ஆகிய இருவரும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். ஸ்ரீதர் ராஜு 48 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். மற்றொரு தொடக்க வீரரான சுரேஷ் குமார் அரைசதம் அடித்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய சாய் சுதர்ஷன் 18 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடித்தார்.