
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலபரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கோவை கிங்ஸ் அணிக்கு சுஜய் - சுரேஷ் குமார் இணை களமிறங்கினர். இதில் சுரேஷ் குமார் 2 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் சுஜயுடன் இனைந்த சாய் சுதர்சன் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்களில் சுஜயும், 41 ரன்களில் சாய் சுதர்சனும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய ஆதிக் உர் ரஹ்மான் அதிரடியாக விளையாடி 31 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஷாருக் கான், முகமது ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.