
TNPL 2023: Siechem Madurai Panthers defeated Ba11sy Trichy with three overs to spare! (Image Source: Google)
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் திருச்சி மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய திருச்சி அணியில் கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அவரைத் தொடர்ந்து சரண் 5 ரன்களுக்கும், ஃபிரான்சிஸ் ரோகின்ஸ் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய மணி பாராதி ஓரளவு தாக்குப்பிடித்து 3 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 40 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் 18.5 ஓவர்களிலேயே திருச்சி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.