
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 21ஆவது லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு சந்தோஷ் குமார் - ஜெகதீசன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்திருந்த ஜெகதீசன் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 56 ரன்கள் எடுத்த நிலையில் சந்தோஷ் குமாரும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கேப்டன் பாபா இந்திரஜித் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த ஃபெராரீயோ - பிரதோஷ் பால் ஆகியோரும் அதிரடியாக விளையாட சூப்பர் கில்லீஸ் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின்னர் 30 ரன்களில் ஃபெராரீயோ தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிரதோஷ் பால் 29 ரன்களையும், அபிஷேக் தன்வர் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களைக் குவித்தது. திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி தரப்பில் ராஜ்குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய கிராண்ட் சோழாஸ் அணிக்கு வசீம் அஹ்மத் - ராஜ்குமார் இணை தொடக்கம் கொடுத்தனர்.