Advertisement
Advertisement
Advertisement

அஸ்வினுக்கே மான்கட் வார்னிங் கொடுத்த நெல்லை வீரர் - வைரலாகும் காணொளி!

டிஎன்பிஎல் லீக் போட்டியின் போது பந்தை வீசுவதற்கு முன்பு கிரீஸை விட்டு வெளியேறிய திண்டுக்கல் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நெல்லை வீரர் மோகன் பிரசாத் வார்னிங் கொடுத்து நிகழ்வானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement
அஸ்வினுக்கே மான்கட் வார்னிங் கொடுத்த நெல்லை வீரர் - வைரலாகும் காணொளி!
அஸ்வினுக்கே மான்கட் வார்னிங் கொடுத்த நெல்லை வீரர் - வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 29, 2024 • 12:48 PM

சர்வதேச அளவில் மான்கடிங் (ரன் அவுட்) விக்கெட்டிற்கு புகழ்பெற்றவர் இந்திய அணியின் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஒவ்வொரு முறையும் இந்த முறையில் வீரர்கள் விக்கெட்டை இழக்கும் சமயத்தில் அஸ்வினின் ஆதரவு குரலானது ஓங்கும். ஏனெனில் பந்துவீச்சாளர் பந்தை வீசுவதற்கு முன்னேரே நான் ஸ்டிரைக் பேட்டர்கள் க்ரீஸை விட்டு வெளியேறுவது கிரிக்கெட்டின் மான்பை குறைப்பதுடன், அது பேட்டர்களுக்கு சாதகமாகவும் பார்க்கப்படுவதாக குற்றஞ்சாட்டிவந்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 29, 2024 • 12:48 PM

மேற்கொண்டு தொடர்ச்சியாக இதுபோன்ற விக்கெட்டுகளை வீழ்த்துவதை நடைமுறை படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அஸ்வின் கோரிக்கை வைத்து வந்தார். அதன் பயனாக கடந்தாண்டு முதல் மான்கட் முறையானது அதிகாரப்பூர்வ ரன் அவுட்டாக ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும், இறுதியில் ஐசிசியின் இந்த முடிவானது அஸ்வினுக்கு கிடைத்த வேற்றியாகவே பார்க்கப்பட்டது. 

Trending

இந்நிலையில் பந்துவீச்சாளர் பந்துவீசுவதற்கு முன்னர் நான் ஸ்டிரைக்கர் பேட்டர் க்ரீஸை விட்டு வெளியேறக்கூடாது என ஒவ்வொரு முறையும் அழுத்தமாக கூறிவரும் அஸ்வின், அதனை மறந்த சம்பவம் தான் தற்சமயம் பேசுபொருளாக மாறியுள்ளது. அதன்படி தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

அப்போது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, அந்த அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் களத்தில் இருந்தார். இதில் நெல்லை வீரர் மோகன் பிரசாத் பந்துவீசிய சமயத்தில், நான் ஸ்டிரைக்கராக இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சாளர் பந்துவீசும் முன் க்ரீஸை விட்டு வெளியேற முயற்சித்தார். அதனை சூதாரித்த மோகன் பிரசாத் பந்துவீசுவதை நிறுத்தியதோடு நடுவரிடம் வார்னிங்க் கொடுக்கும் படி அறிவுறுத்தினார். 

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மோகன் பிரசாத் ரன் அவுட்டிற்கான வார்னிங்கை கொடுத்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேற்கொண்டு இப்போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்த கையோடு தொடரிலிருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement