Advertisement
Advertisement
Advertisement

TNPL 2024: ஷாருக் கான் அதிரடி அரைசதம்; மதுரை பாந்தர்ஸுக்கு 164 ரன்கள் இலக்கு!

Tamil Nadu Premier League 2024: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணியானது 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
TNPL 2024: ஷாருக் கான் அதிரடி அரைசதம்; மதுரை பாந்தர்ஸுக்கு 164 ரன்கள் இலக்கு!
TNPL 2024: ஷாருக் கான் அதிரடி அரைசதம்; மதுரை பாந்தர்ஸுக்கு 164 ரன்கள் இலக்கு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 23, 2024 • 09:00 PM

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற 22அவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கோவை கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய சுஜய் மற்றும் ஜெயராமன் சுரேஷ் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 23, 2024 • 09:00 PM

பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 29 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் சுரேஷ் குமார் 16 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 15 ரன்கள் எடுத்திருந்த சுஜயும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த சாய் சுதர்ஷன் மற்றும் முகிலேஷ் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் முகிலேஷ் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Trending

அதேசமயம் மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்ஷனும் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய அரவிந்தும் 8 ரன்களுடனும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாருக் கான் களமிறங்கியது முதலே சிக்ஸர்களை பறக்கவிட, அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. ஆனால் மறுமுனையில் விளையாடிய அதீக் உர் ரஹ்மான் 3 ரன்களிலும், முகமது ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிவந்த ஷாருக் கான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. மதுரை பாந்தர்ஸ் அணி தரப்பில் அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், மிதுன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement