
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் மினி ஏலத்தில் இங்கிலாந்து இளம் வீரர் டாம் கரனை ஆர்சிபி அணி ரூ.1.5 கோடிக்கு வாங்கியது. இதுவரை ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள டாம் கரணை, ஆர்சிபி அணி என்ன காரணத்திற்காக வாங்கியது என்று யாருக்கும் புரியவில்லை.
ஏனென்றால் கேகேஆர், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ள டாம் கரண், இதுவரை சொல்லி கொள்ளும்படி பெரிதாக விளையாடியதில்லை. இதனால் ஆர்சிபி நிர்வாகம் தவறு செய்ததா அல்லது வேறு வீரர் கிடைக்காமல் வேறு வழியின்றி இவரை வாங்கியதா என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆர்சிபி அணி வாங்கிய நேரம் டாம் கரண் புதிய சர்ச்சையில் உள்ளார். ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டு வரும் பிக் பேஷ் லீக் தொடரில் டாம் கரண் நட்சத்திர வீரராக வலம் வருகிறார். இதில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.