
இந்தியாவில் இன்று கோலாகலமாக தொடங்கிய ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் மட்டுமே குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 77 ரன்களையும், ஜாஸ் பட்லர் 43 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது 36.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 283 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தரப்பில் தொடக்க வீரர் டெவான் கான்வே 152 ரன்களையும், மூன்றாவது வீரராக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 123 ரன்களையும் குவித்து அசத்தினர்.