
ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்காக ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். கடந்த 2018க்கு பின் முதல் முறையாக இந்த ஆண்டு மெகா அளவில் நடைபெற உள்ள இந்த ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
இந்த ஏலத்தில் அதிகபட்ச அடிப்படை விலை தொகையாக 2 கோடி, 1.5 கோடி, 1 கோடி, 50 லட்சம், 20 லட்சம் என 5 வகையான பிரிவுகளின் கீழ் அனைத்து வீரர்களும் பங்கேற்க உள்ளார்கள். அதில் தரமான வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் பல கோடி ரூபாய்களை செலவழிக்க தயாராக காத்திருக்கின்றன. ஐபிஎல் ஏலம் என்றாலே நட்சத்திர வீரர்கள் பல கோடி ரூபாய்களுக்கு ஏலம் போவது வாடிக்கையான ஒன்றாகும்.
அதிலும் 15 கோடிகளுக்கும் மேல் ஒப்பந்தம் செய்யப்பட்ட எத்தனையோ வீரர்கள் கோடிகளில் சாதனைகளைப் படைத்துள்ளதை பார்த்தோம். இருப்பினும் அந்த ஐபிஎல் சீசன் முடிந்த பின்னர் அவர்கள் வாங்கிய பல கோடி ரூபாய் சம்பளத்திற்காக சிறப்பாக செயல்பட்டார்களா என வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பார்த்தால் பெரும்பாலான சமயங்களில் அவர்கள் சுமாராகவே செயல்பட்டு உள்ளார்கள்.