
Top Order Batting Is The Major Concern, Says RCB Captain Du Plessis (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
புனே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் டுபிளசி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரியான் பிராக் 56* ரன்கள் எடுத்து கொடுத்தார்.