
ஐபிஎல்லில் 5 முறை கோப்பையை வென்ற வெற்றிகரமான அணி மும்பை இந்தியன்ஸ். ரோஹித் சர்மா கேப்டன்சியில் 5 முறை கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற சாதனைக்கு சொந்தக்கார அணி மும்பை இந்தியன்ஸ்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, அணி நிர்வாகம் சிறப்பாக அமைந்ததுதான் காரணம். அந்த அணி மிகச்சிறந்த ஜாம்பவான்களை பயிற்சியாளராக கொண்டிருந்திருக்கிறது. ரிக்கி பாண்டிங், மாஹிலா ஜெயவர்தனே ஆகிய மிகப்பெரிய ஜாம்பவான்கள் தான் அந்த அணியின் பயிற்சியாளர்களாக இருந்திருக்கின்றனர்.
2017 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவந்த மஹேலா ஜெயவர்தனேவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதைவிட உயர் பொறுப்பை வழங்குகிறது. எனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் மார்க் பௌச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.