
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபால் ஆகிய மொத்தம் 6 அணிகள் இந்த ஆசியக் கோப்பை 2023 தொடருக்கு தகுதிபெற்றுள்ளது. இந்த 6 அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து விளையாடும். குரூப் ஏ பிரிவில் 3 அணிகளும், குரூப் பி பிரிவில் 3 அணிகளும் இருக்கும். இதில், இரு குழுவிலும் தலா முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். இந்த சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பைனலில் விளையாடும்.
குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபால் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும் இருக்கிறது. இந்நிலையில், ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ரோஹித் ஷர்மா இடம்பெற்றுள்ளார். திலக் வர்மா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் இந்திய அணியின் 17 பேர் கொண்ட அணியில் இடம்பிடிக்காமல், கூடுதல் வீரராக சேர்க்கப்பட்டிருப்பது ரசிகர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. ஏனெனில் சமீப காலங்களில் சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.