Advertisement

ஐபிஎல் 2022: டெல்லி அணியில் இருவருக்கு கரோனா - தகவல்!

டெல்லி அணியில் ஒரு வெளிநாட்டு வீரர் உள்பட மேலும் இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் டெல்லி அணியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 18, 2022 • 15:36 PM
Two more Covid-positive cases in Delhi Capitals camp
Two more Covid-positive cases in Delhi Capitals camp (Image Source: Google)
Advertisement

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி, வரும் புதன் அன்று பஞ்சாப் அணிக்கு எதிராக புனேவில் விளையாடவுள்ளது. 

கடந்த வாரம் டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபர்ஹர்ட், கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். 

Trending


இந்நிலையில் தற்போது டெல்லி அணியில் மேலும் இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வெளிநாட்டு வீரர் மற்றும் பணியாளர் என இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகளைக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளது தில்லி அணி. 

இதனால் தற்போது டெல்லி வீரர்கள் அவரவர் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். பயிற்சியும் ரத்தாகியுள்ளது. இன்று புனேவுக்கு டெல்லி அணி வீரர்கள் செல்வதாக இருந்த நிலையில் அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக பஞ்சாப் அணிக்கு எதிரான டெல்லி அணியின் அடுத்த ஆட்டம் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement