-mdl.jpg)
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் துபாயில் நடைபெற்றது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இதையடுத்து நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் வங்கதேச அணி இந்தியாவையும், யுஏஇ அணி பாகிஸ்தானையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்நிலையில் சாம்பியன் பட்டம் யாருக்கு என்பதை தீர்மானிக்கு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பீல்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஷிகுர் ரஹ்மான் ஷிப்லி மற்றும் ஜிஷான் ஆலம் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஜிஷான் ஆலம் 7 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் களமிறங்கிய ரிஸ்வான் - ரஹ்மான் ஷிப்லி இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் ரிஸ்வான் 60 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து களம் இறங்கிய அரிபுல் இஸ்லாம் 50 ரன்கள், அஹ்ரார் அமீன் 5 ரன்கள், முகமது ஷிஹாப் ஜேம்ஸ் 3 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.