
ஐபிஎல் தொடரின் 40ஆவது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் குஜராத் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை குவித்தது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 65 ரன்களும், எய்டன் மார்க்கம் 56 ரன்களையும் குவித்தனர்.
பின்னர் 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது சிறப்பான துவக்கத்தை பெற்றது மட்டுமின்றி இறுதி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்ற போது நான்கு சிக்ஸர்களை விளாசி கடைசி பந்தில் வெற்றியும் பெற்றது. 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 199 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.