
ஆஸ்திரேலிய அணியுடனான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 2 - 1 என கைப்பற்றி அசத்தியுள்ளது. அட்டகாசமான பேட்டிங் வரிசை உள்ள போதும், இந்திய அணியின் பவுலிங் மட்டும் இன்னும் சொதப்பலாகவே உள்ளது.
புவனேஷ்வர் குமார் கடைசி சில ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதாக அதிருப்திகள் இருந்தன. ஆனால் காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோரும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆஸ்திரேலியாவுடனான 3ஆவது டி20 இல் கூட 117 - 6 விக்கெட்கள் சென்றுவிட்ட போதும், 185 ரன்களை வரை அடிக்கவிட்டு விட்டனர்.
இந்நிலையில் தான் பிசிசிஐ முகமது ஷமியின் விஷயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறது. டி20 உலகக்கோப்பை நடக்கும் ஆஸ்திரேலிய களத்தில் ஷமி பொருத்தமாக இருப்பார். இதற்காக பேக் - அப் வீரராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக கரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.