
தமிழக சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கடந்த ஜூலை மாதம் இலங்கையில் நடைபெற்ற டி20 தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுகமானார். அதன் பின்னர் தற்போது அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை அணியிலும் தேர்வாகியுள்ளார். இதற்கெல்லாம் காரணம் அவரிடம் இருக்கும் பவுலிங் திறமைதான்.
எப்பேர்பட்ட பேட்ஸ்மேனையும் வீழ்த்தும் திறமை அவரிடம் உள்ளது. இதனை நேற்றைய போட்டியிலும் அவர் செய்து காண்பித்தார். அபுதாபியில் நேற்று பெங்களூர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
அதிலும் குறிப்பாக மேக்ஸ்வெல், ஹசரங்கா, சச்சின் பேபி ஆகியோரது விக்கெட்டை வீழ்த்தி பெங்களூரு அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தார். நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 92 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.