Advertisement

இங்கிலாந்தின் தோல்விக்கு இதுவெ காரணம் - மைக்கேல் வாகன்!

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், சீனியர் வீரர் ஒருவரின் பேச்சைக் கேட்டது தான் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மண்ணை கவ்வியதற்கு காரணம் என அந்த அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் விளாசியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 23, 2021 • 12:46 PM
Vaughan Lashes Out At Coach Silverwood For Joe Root's 'Brain Fade' Moment At Lord's
Vaughan Lashes Out At Coach Silverwood For Joe Root's 'Brain Fade' Moment At Lord's (Image Source: Google)
Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. கடைசி நாள் வரை பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், சொல்லி வைத்து ஒவ்வொரு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களையும் தூக்கி அசத்தினார்.

இந்த 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சம பலத்துடனே இருந்தது. அதாவது முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஆனால் 2ஆவது இன்னிங்ஸில் அவரின் பாட்ஷா பலிக்கவில்லை. அவர்களின் ரன் குவிப்புக்கு முகமது சிராஜ் முட்டுக்கட்டைப்போட்டதால் அந்த அணி 2ஆவது இன்னிங்ஸில் 120 ரன்களுக்கு சுருண்டது.

Trending


இங்கிலாந்து போன்ற கடினமான களத்தில் முன்னணி பேட்ஸ்மேன்களே ரன் எடுக்க திணறுகின்றனர். அப்படி இருக்கையில் பும்ரா மற்றும் ஷமி சிறிது நேரம் நின்றுவிட்டு விக்கெட்டை பறிகொடுத்திருப்பார்கள். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் வேண்டுமென்றே விக்கெட் எடுக்க முற்படாமல் பும்ராவை தாக்கும் வகையில் பந்துகளை வீசினர். இதுமட்டுமின்றி ஒவ்வொரு ஓவருக்கும் இடையே பும்ராவிடம் வம்பிழுத்தனர்.

இந்நிலையில் அவர்களின் திட்டம், சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையை போல ஆகிவிட்டது. இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நன்கு புரிந்துக் கொண்ட முகமது ஷமி - பும்ரா ஜோடி பவுண்டரி, சிக்ஸர் என பேட்டை சுழற்றினர். இருவரும் சுதாரித்துக் கொண்டு காட்டிய அதிரடியால் 9வது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 77 ரன்களை குவித்தது. 
இதில் முகமது ஷமி 56 ரன்களும், ஜஸ்பிரித் பும்ரா 34 ரன்களும் விளாசினர். இதனால் 220 க்குள் முடியவேண்டிய இந்திய அணியின் ஸ்கோர் 298 ரன்களுக்கு சென்றது. அதிலும் விராட் கோலி டிக்ளர் செய்துவிட்டார். இல்லையென்றால் 300 ரன்களை கடந்திருக்கும். இதனால் அதிக ஸ்கோரை அடிக்க துரத்த முடியாமல் இங்கிலாந்து தோல்வியடைந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டை சீனியர் வீரர் யாரோ ஒருவர் கட்டுப்படுத்தியதே தோல்விக்கு காரணம் என அந்த அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் குற்றம்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து பேசிய மைக்கேல் வாகன், “கடந்த சில வருடங்களில் இங்கிலாந்து அணியின் மிக மோசமான ஆட்டம் இதுதான். இப்படி ஒரு சொதப்பலை பார்த்ததே இல்லை. பும்ராவிடம் எதற்காக அதிக பவுன்சர்கள் வீசப்பட்டன. இங்கிலாந்து அணியை அப்போது ஜோ ரூட் வழிநடத்தவில்லை எனத்தெரிகிறது. ரூட் வேறு யாரோ சீனியர் வீரரின் பேச்சைக் கேட்டு தவறான வழியில் சென்றிருக்கிறார். அந்த சீனியர் வீரர் நிச்சயம் தனிப்பட்ட காரணங்களுக்காக ரூட்டை தவறாக வழிநடத்தியிருக்க வேண்டும்

பயிற்சியாளர் சில்வர்வுட் அப்போது என்னதான் செய்துக்கொண்டிருந்தார் எனத் தெரியவில்லை. குளிர்பானம் கொடுக்க மைதானத்திற்கு உள்ளே சென்ற ஏதாவது ஒரு வீரரிடம், ரூட் தவறான திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் எனக்கூறியிருக்க வேண்டும். ஆனால் மௌனம் காத்திருந்துள்ளார். சில்வர்வுட்டால் இங்கிலாந்து அணியை எந்த சரிவில் இருந்து வேண்டுமானாலும் மீட்டிருக்க முடியும். ஆனால் அப்படி நடக்கவில்லை” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement