Advertisement
Advertisement
Advertisement

கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை நாங்கள் பயன்படுத்துவோம் - ஸ்டீபன் ஃபிளெயிங்!

முதலில் ஷுப்மன் கில்லை விரைவில் வீழ்த்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan May 28, 2023 • 14:28 PM
Very hard to win consecutive IPL titles: CSK coach Stephen Fleming
Very hard to win consecutive IPL titles: CSK coach Stephen Fleming (Image Source: Google)
Advertisement

16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் அணிகள் மோதும் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இங்கு இதுவரை ஒன்பது போட்டுகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி ஆறு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.எனினும் சிஎஸ்கே அணி இங்கு ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. 

விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த அணி இங்கு ஐந்து ஆட்டங்களில் வென்று இருக்கிறது. முதலில் சுப்மன் கில்லை விரைவில் வீழ்த்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன்  ஃபிளமிங் தெரிவித்துள்ளார். 

Trending


இறுதிப் போட்டிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீபன் ஃபிளெமிங், “ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடுகிறார். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. அவரது விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு உருவாக்கும் வல்லமை எங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தொடக்க வீரர்கள் பலமாக இருந்தால் அவர்களை விரைவில் வீழ்த்தி நடுவரிசை வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சி செய்வோம்.

ஆனால் அதற்கு முதலில் ஷுப்மன் கில்லை நாங்கள் தாண்ட வேண்டும். இறுதிப்போட்டி மிகவும் ஆர்வமாகவும் அதே சமயம் கொஞ்சம் பதற்றம் ஆகவும் இருக்கிறது. இது மிகப்பெரிய தொடர். இறுதிப் போட்டிக்கு வருவதற்காக நாங்கள் பல முயற்சிகளை செய்திருக்கிறோம். தற்போது இங்கு வந்திருப்பதை நினைத்து பெருமை கொள்கிறோம்.

எனினும் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை நாங்கள் பயன்படுத்துவோம். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. முதலில் போட்டியில் நன்றாக விளையாட வேண்டும். இறுதிப் போட்டியில் விளையாடும் போது கோப்பையை பற்றி நினைக்காமல் அதனை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான விஷயம். இறுதிப் போட்டியில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் குறிப்பாக டாப் ஆர்டர் வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டும்.

அப்போதுதான் பந்து வீசும் போது எங்களால் போட்டியில் இருக்க முடியும். டாப் ஆர்டர் வீரர்களுக்கு பிறகும் எங்களிடம் அனுபவம் இருக்கிறது. சிவம் துபேவை  கூட நாங்கள் இம்பேக்ட் வீரராக பயன்படுத்தி வருகிறோம். எங்களுடைய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் இந்த தொடரில் ரன்கள் சேர்த்து இருக்கிறார்கள்.
தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்த பிறகும் நாங்கள் நன்றாகவே விளையாடி இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement