Advertisement

நாங்கள் பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது மர்மமான ஒன்று - ஃபாஃப் டூ பிளெசிஸ்!

நாங்கள் முதல் நான்கு இடங்களைப் பிடிக்க விரும்பினோம், ஆனால் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தது எங்களுக்கு ஒரு நியாயமான பிரதிபலிப்பாகும் என்று டெல்லி அணி கேப்டன் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement
நாங்கள் பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது மர்மமான ஒன்று - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
நாங்கள் பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டது மர்மமான ஒன்று - ஃபாஃப் டூ பிளெசிஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 25, 2025 • 11:08 AM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீசுவதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
May 25, 2025 • 11:08 AM

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் கடந்து அசத்தினார். இப்போட்டியில் அவர் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 44 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களைச் சேர்த்தது.

பின்னர் கடின இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கேஎல் ராகுல் 35 ரன்னிலும், டூ பிளெசிஸ் 23 ரன்னிலும், செதிகுல்லா அடல் 22 ரன்னிலும், கருண் நாயர் 44 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதிவரை களத்தில் இருந்த சமீர் ரிஸ்வி 3 பவுண்டரி 5 சிக்ஸர்கள் என 58 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய டெல்லி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், “இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. நாங்கள் முதல் நான்கு இடங்களைப் பிடிக்க விரும்பினோம், ஆனால் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தது எங்களுக்கு ஒரு நியாயமான பிரதிபலிப்பாகும். ஆனாலும் நாங்கள் எவ்வாறு பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டோம் என்பது பெரிய மர்மங்களில் ஒன்றாகும், அந்த கேள்விக்கு நாங்கள் டிரஸ்ஸிங் ரூமில் சில முறை பதிலளிக்க முயற்சித்தோம்.

Also Read: LIVE Cricket Score

தன்னம்பிக்கை, ரன்கள் இல்லாதது, நன்றாக விளையாடும்போது, ​​சிறிய வித்தியாசத்தில் வெற்றி என்ற காரணங்கள் உள்ளன. மேலும் 5 அல்லது 6 ஓவர்களில் எங்களுடைய ஆட்டத்தை நாங்கள் இழந்துள்ளோம். அது ஒரு பெரிய போட்டியில் எங்களுக்கு இழப்பை ஏற்படுத்தியது. ஐபிஎல் என்பது இளம் வீரர்கள் மற்றும் உள்நாட்டு வீரர்களைப் பற்றியது, விப்ராஜ் எங்களுக்கு அற்புதமாக இருந்தார், பந்து வீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் கூட, ஒரு லெக்ஸ் ஸ்பின்னர் ஆல்ரவுண்டராக இருப்பது அரிது” என்று கூறிவுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement