-mdl.jpg)
இந்தியாவில் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் இன்று குரூப் இ பிரிவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தமிழ்நாடு, மத்தியப் பிரதேச அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
தமிழ்நாடு அணிக்கு தொடக்கம் ஓரளவு சிறப்பாக அமைய, ஒன்டவுனில் களமிறங்கிய இந்திரஜித் சிறப்பாக விளையாடி 92 ரன்கள் குவித்தார். அவருக்கு பிரதோஷ் பால் ரஞ்சன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க, இருவரின் உதவியுடன் தமிழ்நாடு அணி 195 ரன்கள் குவித்தது. மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
மத்திய பிரதேச அணித் தரப்பில் ராகுல் பாதம், சரன்ஸ் ஜெயின், சுபம் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர். பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய பிரதேச அணி களமிறங்கியது.