
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற் ஹரியானா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யுவ்ராஜ் சிங் ஒரு ரன்னிலும், ஹர்ஷித் ராணா 10 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த அன்கித் குமார் - கேப்டன் மெனரியா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.
அதன்பின் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அன்கித் குமார் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 88 ரன்களிலும், கேப்டன் மெனரியா 70 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் ஓரளவு ரன்களைச் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் ஹரியானா அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் அங்கித் சௌத்ரி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.